இவ்வார கிரீடம் பெறுபவர் சூர்யா கண்ணன்

Blog name http://www.suryakannan.blogspot.com/
1. உங்களைப் பற்றி சுருக்கமாக சில வரிகள் ?
நான் எந்த கணினி வகுப்பிற்கும் செல்லாமல், சுயமாக கற்றுக் கொண்டவன். தினசரி கற்று கொண்டிருப்பவன். எனக்கு தெரிந்த அனைத்தையும் கற்றுக் கொடுப்பதில் ஆர்வமுள்ளவன்.
வாழ்க்கைப் போராட்டத்தில், எத்தனையோ இடர்களையும், தடைகளையும் தாண்டி சுயமாக தொழில் செய்து வருகிறேன்.
2.நீங்கள் வலைப்பதிவு எழுத வந்ததன் நோக்கம் ?
நான் அறிந்தவற்றை மற்றவர்களோடு பகிர்வதில் ஒரு ஆத்ம திருப்தி!
3.உங்களின் பதிவுகளை சக பதிவர்கள் விமர்சிக்கும் போது அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள் ?
சக பதிவர்களின் விமர்சனமே என்னை இந்த அளவிற்கு வார்த்தெடுத்திருக்கிறது.
4.பதிவுலகிற்கு வந்ததன் மூலம் நீங்கள் அடைந்த நன்மை மற்றும் தீமைகள் ?.
நன்மை: பதிவுலக நண்பர்கள்.
தீமைகள்: சரியான உறக்கமின்மை.
5-வலை உலகத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஐந்து பதிவர்கள் யார் ? யார் ?
தமிழ் நெஞ்சம்.
பாமரன்.
ஷிர்டி சாய்தாசன். (சுதந்திர இலவச மென்பொருள்)
திருமதி. மேனகா சத்யா (http://sashiga.blogspot.com)
கும்மாச்சி மற்றும் பலர்.
6-உங்கள் பதிவுகள் பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளாகவே இருக்கிறதே ?.இது உங்கள் உங்கள் துறை மீது நீங்கள் வைத்து இருக்கும் காதலாலா ?
என் மனைவி அடிக்கடி சொல்வது. “கணினியையே கட்டிட்டு அழுங்க,”
ஆனால் அவ்வப்போது அவர் தரும் பாராட்டுகளே என்னை வளர்த்திருக்கிறது.
7-எதிர் காலத்தில் பத்திரிகை , தொலைகாட்சி போன்று வலைப்பதிவும் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்று நம்புகிறீர்களா ?…
பத்திரிக்கை, தொலைக்காட்சி ஐ விட ஒரு பெரிய சக்தியாக நிச்சயமாக உருவெடுக்கும். (கருத்து சுதந்திரம் உள்ளவரை இந்த வளர்ச்சி தவிர்க்க முடியாத ஒன்று..,)
8-புதிதாக பதிவுலகத்திற்கு வரும் பதிவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை ?
நீங்கள் எழுதப்போகும் கருத்தில் நீங்கள் தெளிவாக இருந்தால், தைரியமாக எழுதுங்கள். உங்கள் பதிவுகள் வாசகர்களுக்கு பயன்படும்படி இருக்கட்டும்.
9 – தமிழ்10 தளம் பற்றிய உங்கள் கருத்து
தமிழ்10 தளம் பதிவுகளை பகிர்வதோடு மட்டுமல்லாமல், பதிவர்களை ஊக்குவிக்கும் தளமாகவும் உள்ளது. இத்தளத்தில் எனது பதிவுகளை இடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.
10 – இறுதிக் கேள்வி உங்கள் வாழ்வின் இலட்சியம் ?
பெரிதாக ஒன்றுமில்லை. எப்பொழுதும் என்னைச் சுற்றி உள்ளவர்களை மகிழ்வாக வைத்திருக்க வேண்டும்.
உங்கள் எண்ணம் போலவே தொடர்ந்தும் இது போன்ற பதிவுகளை எழுத தமிழ்10 தளத்தின் வாழ்த்துக்கள்

