Archive

Archive for September, 2009

இவ்வார கிரீடம் பெறுபவர் (28 -09 -09 ) முதல் (04 -10 -09 )

September 27th, 2009 No comments


இவ்வார கிரீடம் பெறுபவர் “வன்னி தகவல் தொழில்நுட்பம் ”

தள முகவரி http://vannitec.blogspot.com/


1. உங்களைப் பற்றி சுருக்கமாக சில வரிகள் ?
எனது பெயர் தீபன். ஈழத்தில் யாழ்ப்பாணம் இளவாலை என்னும் இடத்தில் பிறந்து வளர்ந்து பின்னர் இடப்பெயர்வு காரணமாக (போர்ச்சூழலால் ) முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு என்னும் இடத்தில் கல்வியை தொடர்ந்து தற்பொழுது பல்கலைக்கழகத்தில் பட்டக்கல்வியை மேற்கொண்டிருக்கும் ஒரு மாணவன்.

2.நீங்கள் வலைப்பதிவு எழுத வந்ததன் நோக்கம் ?
வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம் என்னை போன்ற கிராமத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டுமென்ற ஒரு குறிக்கோளில்.

3.உங்களின் பதிவுகளை சக பதிவர்கள் விமர்சிக்கும் போது அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள் ?
வாழ்க்கையே ஒரு விமர்சனம் நிறைந்ததுதான். விமர்சனங்களால் தான் முன்னேறமுடியும்.

4.பதிவுலகிற்கு வந்ததன் மூலம் நீங்கள் அடைந்த நன்மை மற்றும் தீமைகள் ?
நன்மைகள்:தகவல் தொழில்நுட்ப அறிவை வளர்த்தமை. பதிவுலக நண்பர்கள். இன்னும் பல…
தீமைகள் என்று சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை.

5-வலை உலகத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஐந்து பதிவர்கள் யார் ? யார் ?
அரும்பு http://muthalarumpu.blogspot.com/
பனையூரான் http://panaiyooraan.blogspot.com/
சூர்யா கண்ணன் http://suryakannan.blogspot.com/
இளவேனில் http://tamilnathy.blogspot.com/
:::TECHNOLOGY::: http://svttechnologya.blogspot.com/

6-இப்போது பதிவுத் திருட்டு சாதரணமாக நடக்கிறது இது பற்றிய உங்கள் கருத்து ? மற்றும் இதை எவ்வாறு தடுப்பது ?
அவ்வாறான பதிவுகளை இடுபவர்கள் அந்த பதிவுகளுக்கு கீழ் அந்த வலைப்பதிவுகளின் பெயர்களை குறித்து நன்றி தெரிவித்தல் நல்லது.

7-எதிர் காலத்தில் பத்திரிகை , தொலைகாட்சி போன்று வலைப்பதிவும் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்று நம்புகிறீர்களா ?…
ஆம். நிச்சயமாக அதைவிட மிகப்பெரியதொரு சக்தியாக ஊடக உலகில் திகழும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.

8-புதிதாக பதிவுலகத்திற்கு வரும் பதிவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை ?
சக பதிவர் ஜெயக்குமார் குறிப்பிட்டது போன்று எல்லாப்பதிவர்களும் ஒரு காலத்தில் புதியவர்களே. நானும் ஒரு புதிய பதிவர் தான். இலைமறை காயாக இருக்கும் உங்கள் திறமைகளை வெளிக்கொணர கிடைத்த ஒரு சந்தர்ப்பம். உங்கள் ஆளுமைகளுக்கான ஒரு அரங்கம்.

9 – தமிழ்10 தளம் பற்றிய உங்கள் கருத்து
எனது பதிவுகளை வெளியுலகத்திற்கு கொண்டுவருவதில் ஒரு பெரும் ஊடகப்பங்காளியாக இருந்து எனது திறமைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்த நேரத்தில் தமிழ்10 இணையத்தளத்திற்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

10 – இறுதிக் கேள்வி உங்கள் வாழ்வின் இலட்சியம் ?
பெரிதாக ஒன்றுமில்லை. தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியை கிராம மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயற்படும் ஒரு கிராமத்து இளைஞன்

போர் மேகம் சூழ்ந்த ஓர் இடத்தில் பிறந்து நீங்கள் அறிந்ததை மற்றவருக்கும் அறியும் வண்ணம் பல தொழில் நுட்பப் பதிவுகளை இடும் நீங்கள் உங்கள் வாழ்வில் அனைத்து இலட்சியங்களையும் வெற்றியாகப் பெற தமிழ்10 தளம் சார்பாக வாழ்த்துக்கள்

இவ்வார கிரீடம் பெறுபவர் தமிழ்குமார் (21 -09 -09 ) முதல் (27 -09 -09 )

September 20th, 2009 No comments

Tamil10.com வழங்கும் இவ்வார கிரீடம் பெறுபவர் தமிழ்குமார் (21 -09 -09 ) முதல் (27 -09 -09 )(http://kittipullu.blogspot.com)

1.உங்களைப் பற்றி சுருக்கமாக சில வரிகள்?
.என் பெயர் தமிழ்குமார் பிறந்தது தஞ்சையில்.இப்பொழுது கணினி நிபுணராக சிங்கையில் பணிபுரிகிறேன்.சிறு வயது முதல் தமிழ் மேல் ஆர்வம் அதிகம் காரணம் எனது பெற்றோர் தமிழ் மேல் வைத்திருந்த ஈடுபாடு,அதுதான் என்னை எழுத வைத்திருக்கிறது

2.நீங்கள் வலைப்பதிவு எழுத வந்ததன் நோக்கம் ?
.தமிழ் மீது என் ஆர்வம் அதிகம் இருந்தாலும் தற்செயலாக தான் தமிழ் வலைப்பூ உலகம் எனக்கு அறிமுகமானது என்றே சொல்ல வேண்டும்.கணிசமான எண்ணிக்கையில் தமிழ் வலைப்பூ உலகம் ஆரோக்கியமாக வளர்ந்து வருவதையும்,நாமும் ஒரு வலைப்பூ உருவாக்கி நம் எண்ணங்களை தமிழ் வாசகர்களிடம் பகிர ஆசை ஏற்பட்டு, துவங்கிய தளம் தான் “கிட்டிப்புல்லு”

3.உங்களின் பதிவுகளை சக பதிவர்கள் விமர்சிக்கும் போது அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள் ?
என் பதிவுகளை பலர் விமர்சனம் செய்யும்போது அதை ஆரோக்கியமாக எடுத்து கொண்டால் தான் பல நல்ல படைப்புகளை நாம் தர முடியும்.அதேபோல் நாமும் பலர் தளத்திற்கு சென்று நல்ல ஆரோக்கியமான விமர்சனம் செய்ய வேண்டும்.அப்போது தான் தமிழ் வலைப்பூ உலகம் அடுத்த தளத்திற்கு செல்ல முடியும்.

4.பதிவுலகிற்கு வந்ததன் மூலம் நீங்கள் அடைந்த நன்மை மற்றும் தீமைகள் ?.
.பல நன்மைகள்.முதலில் என்னையும் ஒரு எழுத்தாளராக எனக்கே அறிமுகபடுத்தியது.பல நண்பர்கள் இதன் மூலம் கிடைத்தார்கள்.நமக்கு தெரிந்த பல கருத்துக்களை பிறருக்கு அறிமுகம்படுத்தியது இன்னும் பல.தீமை என்று பார்த்தால் இதுவரைக்கும் எதுவும் குறிப்பாக சொல்ல முடியவில்லை.

5.வலை உலகத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஐந்து பதிவர்கள் யார் ?
நிறைய எழுத்தாளர்கள் இருகிறார்கள்,குறிப்பாக சொல்லமுடியவில்லை இங்கு அனைவருக்கும் தனி பாணி இருக்கிறது.

6.இப்போது பதிவுத் திருட்டு சாதரணமாக நடக்கிறது இது பற்றிய உங்கள் கருத்து ? மற்றும் இதை எவ்வாறு தடுப்பது
.வலை திருட்டு இப்பொழுது அதிகமாக இருந்தாலும் ,அதை கண்டிப்பாக தவிர்க்க முடியும்,தமிழ் வலைப்பூ உலகம் மூலம் நம் படைப்புகளை copyright செய்ய முடியுமா என்று நாம் ஆராய வேண்டும்.

7.எதிர் காலத்தில் பத்திரிகை , தொலைகாட்சி போன்று வலைப்பதிவும் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்று நம்புகிறீர்களா ?…
எதிர்காலத்தில் வலைப்பூ உலகம் பெரிய வளர்ச்சி பெரும் என்பது திண்ணம்.இப்பொழுதே இவ்வுலகம் நல்ல வளர்ச்சியினை கண்டு வருகிறது,நிறைய நல்ல படைப்புகளை நாம் தந்து வந்தால் வாசகர் வட்டமும் பெருகும்,நம் படைபிற்கும் அங்கீகாரம் கிடைத்து தமிழ் வலைபூ உலகம் மற்ற தகவல் சாதனம் போல் அசுர வளர்ச்சி பெரும்.

8.புதிதாக பதிவுலகத்திற்கு வரும் பதிவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை ?
புதிதாக வரும் எழுத்தாளர்கள் நல்ல தரமான படைப்புகளை தர வேண்டும், சுவாரசியமாக எழுத தெரிந்தால் தமிழ் வலைப்பூ உலகம் உங்களுக்கு ஏற்றதுதான்.நம் வலைப்பூவை நிறைய பேர் பார்க்க வேண்டும் என்று அனைவர்க்கும் ஆசை இருக்கும்,அதற்கு நல்ல படைப்பை தந்தால் உங்களுக்கு தனி வாசகர் கூட்டம் உருவாகும்,புதிதாக வரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

9.தமிழ்10 தளம் பற்றிய உங்கள் கருத்து??
குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சி பெற்ற திரட்டி என்றால் அது tamil10.com என்றே சொல்ல வேண்டும்.பல புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் தளம்,என்னை போல் புதிதாக வரும் எழுத்தாளர்களையும் வாசகர்களுக்கு அறிமுக படுத்தியதில் tamil10.com யின் பங்கு முக்கியமானது,இந்த வாரம் எனக்கு கிரீடம் வழங்குவதற்கு tamil10.com நிர்வாகிகளுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இது போல் பல எழுத்தாளர்களுக்கு நீங்கள் ஊக்கம் கொடுக்க வேண்டும்.

10.இறுதிக் கேள்வி உங்கள் வாழ்வின் இலட்சியம் ?
நிறைய இருக்கிறது, குறிப்பாக தமிழ் மண்ணுக்கு பயன் தரும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது.

உங்கள் இலட்சியம் போலவே தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வாழ்வில் வெற்றி பெற தமிழ்10 தளம் சார்பில் வாழ்த்துக்கள்

இவ்வார “கிரீடம்” பெறுபவர் ஜெயக்குமார்

September 13th, 2009 No comments

http://saidapet2009.blogspot.com/

1. உங்களைப் பற்றி சுருக்கமாக சில வரிகள் ?
எனது பெயர் ஜெயக்குமார். கி ஸ்ரீ .கிருஷ்ணா என்ற பெயரில்
பதிவிடுகிறேன் , பிறந்தது திருச்சி அருகே பெரம்பலூர் மாவட்டத்தில்
மாவலிங்கை கிராமத்தில் விவசாய குடும்பம் . தற்போது அரசு பணியிலிருந்து
விடுப்பு கொடுத்துவிட்டு சென்னை எஸ்.ஆர். எம் பல்கலைகழகத்தில் எம்.டெக்
கணிப்பொறி அறிவியல் பயின்று வருகிறேன் . ஒரே சகோதரன் வினோத் குமார் .

2.நீங்கள் வலைப்பதிவு எழுத வந்ததன் நோக்கம் ?
வலைப்பதிவில் முதலில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன் , அதுபோல
எனக்கு தெரிந்த விசயங்களை பகிர்ந்துகொள்ள மேலும் தெரிந்துகொள்ள
முடிந்தவரை எழுதிவருகிறேன் .

3.உங்களின் பதிவுகளை சக பதிவர்கள் விமர்சிக்கும் போது அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள் ?
அவர்கள் விமர்சனத்தில் பாராட்டும்போது ஏற்றுக்கொள்வதை போல் குறைகளை
சுட்டிகட்டும்போது மேலும் நன்றாக எழுத ஆசைவரும். நல்ல பதிவு
என்னிடமிருந்து வர அவர்களும் ஒரு கரணம்.

4.பதிவுலகிற்கு வந்ததன் மூலம் நீங்கள் அடைந்த நன்மை மற்றும் தீமைகள் ?.
.பதிவுலகில் பெற்ற நன்மைகள் பல விஷயங்கள் கற்று கொண்டேன் பல நண்பர்கள்
சகோதரிகள் கிடைத்தனர், தீமைகள் என்று சொல்லும்படி எதுவும் இல்லை .

5-வலை உலகத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஐந்து பதிவர்கள் யார் ? யார் ?
பிடித்த பதினைந்து பதிவர்கள் கூட சொல்லலாம் எனக்கு பிடித்த ஐந்து பதிவர் .
சுமஜ்லா,செந்திலின் பக்கங்கள்,நிஜாமுதீன், வால்பையன்,பொன்மலர் ஆகியோர் .

6-இப்போது பதிவுத் திருட்டு சாதரணமாக நடக்கிறது இது பற்றிய உங்கள் கருத்து ? மற்றும் இதை எவ்வாறு தடுப்பது ?
சமீபத்தில் இது பற்றிய பதிவு எழுதி இருந்தேன் இவர்கள் சொல்லி
கேட்கப்போவது இல்லை . நம் பதிவை திருடி போட்டிருக்கிறார் என்று
சந்தோசமாக எடுத்துக்கொள்ளலாம் . தமிழினி கூறியதுபோல் இணைப்பு கொடுக்கும்
தளங்களுக்கு தெரிவித்து தடுப்பது சிறந்த வழி.

7-எதிர் காலத்தில் பத்திரிகை , தொலைகாட்சி போன்று வலைப்பதிவும் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்று நம்புகிறீர்களா ?…
நிச்சயமாக தற்பொழுதே அத்தகைய நிலையை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது
,விரைவில் தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறும் என்பதில் ஐயமில்லை . இங்கு
எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி கருத்துக்களை கூறுவதால் எல்லோருக்கும்
எளிதில் பிடித்துபோகிறது.

8-புதிதாக பதிவுலகத்திற்கு வரும் பதிவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை ?
எல்லா பதிவர்களும் ஒரு காலத்தில் புதியவர்கள் தான் ,நானும் புதியவன்
தான் எப்போதும் ,பதிவு தொடங்கி மாதங்கள் தான் ஆகிறது .
எல்லா உதவியும் வலை நண்பர்கள் மூலம் கிடைக்கிறது , வித்தியாசமான சிறந்த
சிந்தனை உள்ளவர்களின் கருத்துக்கு என்று வரவேற்பு உண்டு .

9 – தமிழ்10 தளம் பற்றிய உங்கள் கருத்து
எவ்வளவுதான் எழுதினாலும் அனைவரையும் சென்றடைய வேண்டும்
இதற்க்கு தமிழ் 10 உதவுகிறது , பதிவு அதிக வரவேற்ப்பை பெறுவதால்இன்னும்
யோசித்து எழுதவைக்கிறது. தற்போது புது பொலிவுடன் அழகாக உள்ளது மேலும்
tamil10 சிறப்பு .

10 – இறுதிக் கேள்வி உங்கள் வாழ்வின் இலட்சியம் ?
சிறந்த கல்லூரி பேராசிரியராக வரவேண்டும் , நல்ல மாணவர்களை
உருவாக்கவேண்டும் மற்றும் ஆதரவற்றோர் இல்லம் அமைத்து ஒரு ஆயிரம் பேரை
காப்பாற்றவேண்டும்.

நன்றி தமிழினி மற்றும் தமிழ் குழுவினர் , தொடரட்டும் உங்கள் சீரிய பணி.

நண்பன்

ஸ்ரீ.கிருஷ்ணா
www.saidapet2009.blogspot.com

உங்கள் உயர்ந்த உள்ளம் போலவே , உங்கள் லட்சியத்தை வென்றெடுக்க தமிழ்10 தளத்தின்
உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள்

நன்றி
தமிழ்10 குழுவினர்